மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் தமிழகம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீன் வளத்துறையினரால் தடை விதிக்கப்படும்.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 61 நாட்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். இதனால் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் படகினை கரையில் ஏற்றி தங்கள் படகில் உள்ள சிறிய பழுதுகளை சரி செய்வார்கள் மற்றும் படகுகளுக்கு வர்ணம் தீட்டுவார்கள் மற்றும் தங்கள் மீன்பிடி வலைகள் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை புதுப்பிப்பார்கள்.
இப்பகுதியில் பெரும்பாலும் உள்ள தொழிகள் அனைத்தும் மீன்பிடி தொழிலையே சார்ந்துள்ளது. தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் இந்த தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும். இதனால் வியாபாரிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தடைகாலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வார்கள். இவர்களுக்கு மீன்கள் குறைந்த அளவே கிடைக்கும். இதனால் இப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகமாக காணப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.