தடை காலம் தொடங்கியது: ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதி விசைப்படகு மீனவர்கள் 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை!



மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் தமிழகம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீன் வளத்துறையினரால் தடை விதிக்கப்படும்.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 61 நாட்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். இதனால் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் படகினை கரையில் ஏற்றி தங்கள் படகில் உள்ள சிறிய பழுதுகளை சரி செய்வார்கள் மற்றும் படகுகளுக்கு வர்ணம் தீட்டுவார்கள் மற்றும் தங்கள் மீன்பிடி வலைகள் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை புதுப்பிப்பார்கள். 

இப்பகுதியில் பெரும்பாலும் உள்ள தொழிகள் அனைத்தும் மீன்பிடி தொழிலையே சார்ந்துள்ளது. தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் இந்த தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும். இதனால் வியாபாரிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

தடைகாலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வார்கள். இவர்களுக்கு மீன்கள் குறைந்த அளவே கிடைக்கும். இதனால் இப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை அதிகமாக காணப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments