புதிய தனிநபர் கொள்கையை ஏற்காவிட்டால் கணக்கு நீக்கப்படாது பல வசதிகள் ஒவ்வொன்றாக நிறுத்தம் - வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரிக்கை





புதிய தனிநபர் கொள்கையை ஏற்காவிட்டால், கணக்கு நீக்கப்படாது என்றும் பல வசதிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும் என பயனர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் தனது வலைதளத்தில் அளித்த விளக்கத்தில், ‘புதிய கொள்கைகளை மறுஆய்வு செய்ய அவகாசம் வழங்கப்படும் என்றும் அதன் பின் சில வாரங்களுக்குப் பிறகு நினைவூட்டல் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பின்னர் படிப்படியாக சேவைகள் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ள அந்நிறுவனம், இதன்படி, பயனாளர்கள் சேட் லிஸ்ட்டை பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இன்கம்மிங் வாட்ஸ்அப் அழைப்புகள், வீடியோ கால்களில் பேச முடியும் என்றும் நோட்டிபிகேஷன் எனேபிள் செய்திருந்தால் குறுந்தகவல்களை படித்து, பதிலளிக்க முடியும் என்றும் மிஸ்ட் போன் மற்றும் வீடியோ கால்களை அழைத்து பேச முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதன்பிறகும் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் குறுந்தகவல் அனுப்புதல், இன்கம்மிங் கால்களும் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments