புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியானது.
42 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்தது. தினமும் சராசரியாக 20 முதல் 25 வரை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அரசின் சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 39 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 568 ஆக உயர்ந்தது.
ஒருவர் சாவு
கொரோனாவுக்கு தற்போது 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா 3-வது அலை உருவாக கூடும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.