புதுக்கோட்டை வழித்தடத்தில் மீண்டும் விருதுநகர் - திருச்சி மற்றும் மன்னார்குடி-மானாமதுரை ரெயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வருகிற 1-ந் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. அதாவது பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளை திறக்கவும், கல்லூரிகள் அனைத்தும் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வே பாசஞ்சர் ரெயில்களை இயக்குவது தொடர்பாக அறிவிப்புகளை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் புதுக்கோட்டை வழித்தடத்தில் முக்கிய ரெயில்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ள விருதுநகர்-காரைக்குடி-திருச்சி, மன்னார்குடி-திருச்சி-மானாமதுரை டெமு ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ``புதுக்கோட்டை வழித்தடத்தில் பகலில் ரெயிலில் பயணிக்க பெரிதும் உதவிய இந்த 2 ரெயில்களையும் தென்னக ெரயில்வே மீண்டும் இயக்கவேண்டும். மேலும் விருதுநகர்-காரைக்குடி-திருச்சி ரெயில் 217 கி.மீ. பயண தூரத்தை தொடர்ந்து 5 மணிநேரம் 45 நிமிடங்கள் வரை பயணமாகும். ஆனால் இந்த ரெயிலில் கழிவறை என்பதே இல்லை.
இந்த ரெயிலில் பயணிக்கும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க அவதி அடைந்து வந்தனர். இந்த ரெயிலை மீண்டும் இயக்கும்போது கழிவறை வசதியுடன் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் போது ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு இந்த ரெயில்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.