பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றுகள், வரும் 17ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் வினியோகிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், மே மாதம் தேர்வுகள் நடத்த திட்டமிட்ட நிலையில், கொரோனா 2வது அலை தாக்கியதால், பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
அதனால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்கள் முந்தைய தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களை கணக்கிட்டு அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த 2019-2021ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றுகளை, மாணவர்கள் படித்த பள்ளிகளில் 17ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.