கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது வார்டு மற்றும் 4-வது வார்டு உறுப்பினர்கள் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவியிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது வார்டு உறுப்பினர் அபுதாஹீர் மற்றும் 4-வது வார்டு உறுப்பினர் மும்தாஜ் பேகம் ஆகியோர் நேற்று 21.09.2021 செவ்வாய்க்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவியிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைள் பின்வருமாறு:
1.கோபாலப்பட்டிணம் ஊர் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கோரி,
2.கோபாலப்பட்டிணம் கிராமத்தில் தெரு விளக்கு, அங்கன்வாடியில் புதிய மின் இணைப்பு மற்றும் தண்ணீர் வசதி செய்து தரக்கோரி,
3.கோபாலப்பட்டிணம் கிராமத்தில் உள்ள நெடுங்குளத்தை சுற்றி உள்ள கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்யகோரி,
4.நெடுங்குளம் பெண்கள் குளிக்கும் பகுதியில் படித்துறை அமைக்க கோரி
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது வார்டு உறுப்பினர் அபுதாஹீர் அவர்கள் இரண்டு மனுவும், 4-வது வார்டு உறுப்பினர் மும்தாஜ் பேகம் அவர்கள் இரண்டு மனுவும் அளித்தனர்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற செயலாளர் ஸ்டெல்லா அவர்கள் உடனிருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.