புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.22 லட்சம் செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஒப்படைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்போன்கள் திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அதனை கண்டுபிடிக்க போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் ஏட்டுகள் பிரபுராஜா, சரவணக்குமார், சியாமளன் ஆகிய போலீசார் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன், சிம்கார்டுகளின் எண், செல்போனின் ஐ.எம்.இ.எண் ஆகியவற்றை வைத்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதன் அடிப்படையில் 110 செல்போன்கள் மீட்கப்பட்டன.
இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.22 லட்சம் மதிப்பிலான திருட்டுப்போன செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.
பின்னர், போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் திருட்டு போன செல்போன்களை மீட்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் கண்டுபிடிக்கப்படும். திருட்டு செல்போன்களை வாங்கி பயன்படுத்திய சிலர் தாமாக முன்வந்து போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். மேலும் தனிப்படை போலீசாரை அவர் பாராட்டினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.