புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதி மக்கள் மீமிசல் செல்வதற்கு காட்டுகுளத்தில் இருந்து மீமிசல் காவல் நிலையம் வரை உள்ள சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் காட்டுகுளம் பகுதி மக்கள் மீமிசல் சென்று வருவதற்கு முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது. இந்த சாலையில் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த அக்டோபர்-6 அன்று தெரு விளக்கு சரி செய்யப்பட்டது. நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு GPM மீடியாவின் அன்பான வேண்டுகோள் :
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலை ( ECR ) பகுதியில் இயற்கை மற்றும் சுகாதாரம் சூழ்ந்த எழில்மிகு அழகிய கிராமமாக காட்சியளித்து வருகிறது. அதே சமயத்தில் நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் உள்ள வீடுகளில் வளர்ந்திருக்கும் மரங்களின் கிளைகள் மின்கம்பிகளில் உரசிக் கொண்டிருக்கிறது. இதனால் அடிக்கடி மின்பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது.
எனவே உங்கள் வீடுகளில் உள்ள மரங்களின் கிளைகள் மின்கம்பியில் உரசும்படி இருந்தால் அதை உடனடியாக அகற்றுமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நமது ஊர் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வெளிநாடு வாழ், வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
ஊர் அக்கறையுடன்....
GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
ஆவுடையார் கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.