கட்டிடத்துக்கு பூட்டு...
வடகாடு அருகேயுள்ள அனவயல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் புஷ்பராணி (வயது 45). இவரது கணவர் சின்னத்துரை (50). இவர் அனவயல் எல்.என்.புரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை பூட்டி சாவியை வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்த சாவியை தருமாறு கிராம மக்கள் கேட்டதற்கு அவர் தர மறுத்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில் வடகாடு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது.
கிராம மக்கள் மறியல்
இதனைதொடர்ந்து நேற்று மாலை இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அனவயல் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சின்னத்துரை கிராம மக்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் வடகாடு போலீஸ் நிலையம் அருகே புதுக்கோட்டை-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.