மேலத்தானியம் பகுதியில் கழுதை பால் விற்பனை




புதுக்கோட்டை மாவட்டத்தில், மேலத்தானியம், கீழத்தானியம், சடையம்பட்டி, காரையூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கழுதைகளுடன், ஊர் ஊராக சென்று, கழுதைப் பாலை கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர்.மேலும் கேட்பவர்களுக்கு, அங்கேயே பாலை கறந்து தருகின்றனர். தினமும் காலை, 6 மணி முதல், 9 மணி வரை பால் விற்பனை செய்யப்படுகிறது. கழுதைப் பால், ஒரு சங்கு 50 ரூபாய்க்கும், 100 மில்லி 500 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். கழுதைப் பால் குடித்தால் சளி, இருமல், கரப்பான் நோய், மஞ்சள் காமாலை, பித்தம், வெட்டை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் சரியாகும் எனக் கூறி, வியாபாரம் செய்து வருகின்றனர். கிராம மக்களும் ஆர்வமுடன் வாங்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வருகின்றனர்.இதனால் கிராம புற பகுதிகளில் கழுதைபால் விற்பனை தீவிரமாக நடக்கிறது. கழுதைப்பால் விற்பனை செய்பவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் சென்று, கழுதை பால் விற்று வருகிறோம். கழுதைப் பால் மருத்துவ குணம் கொண்டது. வெறும் வயிற்றில், 7 நாட்கள் தொடர்ந்து குடித்தால் பலன் உண்டு. சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கு போதும். பெரியவர்களுக்கு, 50 மில்லி கொடுக்க வேண்டும். நாங்கள், பால் விற்பனைக்காகவே கழுதை வளர்க்கிறோம். கழுதையை கிராமப் பகுதிகளுக்கு கொண்டு சென்று, கலப்படம் இல்லாமல், அங்கேயே பாலை கறந்து விற்கிறோம் என்று கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments