கோபாலப்பட்டிணத்தில்‌ கடந்த மூன்று வருடத்தில் மூன்று பழமை வாய்ந்த மரங்கள் வீழ்ந்தது! பொதுநல அமைப்புகள், சமூக நல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு GPM மீடியா சார்பா கோரிக்கை!!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலை (ECR) பகுதியில் இயற்கை மற்றும் சுகாதாரம் சூழ்ந்த எழில்மிகு அழகிய பசுமையான கிராம் கோபாலப்பட்டிணம் ஆகும்.இங்கு கடந்த மூன்று வருடத்தில் மூன்று பழமை வாய்ந்த மரங்கள் வீழ்ந்தது.

கடற்கரை ஆலமரம்

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு கஜா புயலின் போது கடற்கரை பள்ளிவாசல் அருகே இருந்த ஆலமரம் சாய்ந்தது.


அவுலியா நகர் ஆலமரம்

கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவுலியா நகரின் அடையாளமாக கம்பிரமாக வளர்ந்து நின்ற பழைமையான ஆலமரம் சாய்ந்தது.


தொடக்கப்பள்ளி ‌வாவரிசி மரம்

கடந்த சில நாட்களுக்கு முன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த வாரிசி மரம் 29.11.2021‌ அன்று இரவு சாய்ந்தது.


பொதுநல அமைப்புகள், சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்களுக்கு GPM மீடியா சார்பாக கோரிக்கை:

வளர்ந்த மரத்தை அகற்றுவது எளிது, ஆனால் அதை வளர்க்க பல ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் வீழ்ந்த மூன்று மரங்களில் அவுலியா நகரில் வீழ்ந்த மரத்தை மட்டுமே அவுலியா நகர் இளைஞர்களின் முயற்சியால் அதே இடத்தில் நடப்பட்டது. 

வரக்கூடிய காலங்களில் நன்கு வளர்ந்த மரங்கள் சாய்ந்தால் அதே இடத்தில் ஊன்றி திரும்பவும் வளர்த்து எடுக்க ஊரில் இருக்க கூடிய சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுநல அமைப்புகள் முன்வர வேண்டும்.

நமது ஊரை பசுமையான ஊராக மாற்ற ஊர் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையாக மரத்தை வளர்தத்தெடுப்போம்.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

மரம் வளர்ப்பு பற்றி  நபி மொழி மரம் நடுவது ஒரு முஸ்லிமின் பொறுப்பு

மரம் நடுவதை, இஸ்லாம் நன்மையாக கணக்கீடு செய்து, தர்மமாக ஊக்குவிக்கின்றது. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).

நமது ஊர் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வெளிநாடு வாழ், வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து மரம் வளர்க்க அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஊர் அக்கறையுடன்....
GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
ஆவுடையார்கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments