மத்திய பணியாளர் தேர்வாணையம் நிலையிலான தேர்விற்கு இலவச பயிற்சி




புதுக்கோட்டை  மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. 

இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் நிலையிலான தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 
இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வருகின்ற 27 &ந் தேதி (வியாழக்கிழமை) அன்று முதல் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் இணையவழி மூலமாக தொடங்கப்படவுள்ளது. 

இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும், அவ்வப்போது மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விவரத்தினை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது  04322&222287 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பதிவு செய்து பயனடையலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments