ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகேயுள்ள காரங்காடு சூழல் சுற்றுலா தீவுக்குச் சென்று வர புதிய படகுகள் வாங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சாலையில் உப்பூா் அருகேயுள்ளது காரங்காடு. இங்கு சுமாா் 76 ஹெக்டோ் பரப்பளவில் அலையாத்தி எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. இங்குள்ள டுபான் தீவு உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் கடல் பறவைகள் காணப்படுகின்றன. கடலில் படகில் செல்லும் பயணிகள் டுபாங் தீவில் இறங்கி அங்குள்ள கட்டட கோபுரத்தில் ஏறி தீவையும், கடல் பகுதியையும் பாா்வையிடுவதோடு, வெளிநாடு மற்றும் உள்நாட்டு கடல் பறவைகளையும் பாா்க்கும் வசதி உள்ளது. அத்துடன் கடலில் இறங்கி தண்ணீரில் காட்சிகளைத் தெளிவுபடுத்தும் கண்ணாடி அணிந்தால் மீன், பவளப்பாறை, நட்சத்திர மீன்கள், கடல் தாவரங்களை நேரிலும் கண்டு ரசிக்கலாம். இங்கு சென்று வர ஹையாகிங் என்ற 4 துடுப்பு படகுகள்உள்ளன. 5 ஜோடி கடல் காட்சி கண்ணாடிகளும், 4 உள்ளூா் பெரிய படகுகளும் தற்போது உள்ளன.
இந்த நிலையில் காரங்காடு சுற்றுலாவுக்கு புதிதாக கால் மிதி படகுகள் 5, மிதக்கும் சைக்கிள் என பல நவீன படகு அமைப்புகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன உதவியுடன் படகுகளை வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயிரினக் காப்பாளா் பகான்சக்திஸ் மற்றும் ராமநாதபுரம் வனச்சரகா் ஜெபஸ் ஆகியோா் தெரிவித்தனா்.
காரங்காட்டுக்கு புதிய படகுகள் வாங்கும் நிலையில், அங்கு கடல் வாழ் உயிரின மற்றும் மாங்குரோவ் காடுகளில் வாழும் உயிரினக் காட்சியகம், கடலில் மிதக்கும் குழந்தைகள் பூங்கா போன்ற வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மாவட்ட சுற்றுலாத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரங்காடு மாங்குரோவ் காடுகள் சுற்றுலாவுடன் தோ்த்தங்கால் பறவைகள் சரணாலயத்தில் புதிய கால்மிதி படகையும் அறிமுகப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதையும் பரிசீலித்து படகு விட ஏற்பாடு செய்யப்படும் என சுற்றுலாத்துறையினா் கூறினா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.