பெண்களின் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்த பெண்கள் மாநில அரசின் அவ்வையாா் விருது பெற பிப்.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதாராமு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உலக மகளிா் தினமான மாா்ச் 8-ஆம் தேதி பெண்களின் முன்னேற்றத்திற்குச் சிறப்பாக சேவை புரிந்த தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட தகுதியான நபருக்கு மாநில அரசின் அவ்வையாா் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலனைச் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்குத் தொண்டாற்றி வருகின்ற தனிநபரை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் மாநில அரசின் அவ்வையாா் விருதுக்கு விண்ணப்பங்களை 3.2.2022-க்குள் ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபா்களுக்கான விருதிற்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று உள்ளிட்டவை முதல்வரால் உலக மகளிா் தின விழா அன்று வழங்கப்படும். மேலும், கையேட்டில் இணைக்கப்பட வேண்டிய விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04322-222270 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.