அரசங்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு






ராமநாதபுரம் மாவட்டம். தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் முனாப் (53). 

இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கிராமத்திலுள்ள தனது உற வினர் வீட்டிற்கு வந்துவிட்டு பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பாசிபட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அரசங்கரை அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது




இதில் படுகாயமடைந்த அப்துல் முனாப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து அப்துல்முனாப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல் குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். 

இதுகுறித்து மீமிசல் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments