புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள துவரடிமனையை சேர்ந்தவர் அண்ணாதுரை. விவசாயி. இவரது மகள் பிரீத்தி (வயது 22). இவர் உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவதால் நாடு திரும்ப முடியாமல் பிரீத்தி அங்கு தவித்து வருகிறார். இவரை போல தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளும் அங்கு தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் அங்கிருந்தபடியே மாணவி பிரீத்தி செல்போன் மூலம் தனது பெற்றோரிடம் பேசுகையில், போரில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படகூடாது என்பதற்காக அந்த நாட்டு அரசு உக்ரைன் அருகே உள்ள ருமேனியாவில் பாதுகாப்பான இடத்தில் மாணவ-மாணவிகளை தங்க வைத்துள்ளது என்று கூறியிருக்கிறார். ஆகவே, உக்ரைனில் இருந்து ருமேனியாவில் தங்க வைக்கப்பட்டு உள்ள தங்களது மகளை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரீத்தியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.