புதுக்கோட்டை அரசு மகளிா் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் மற்றும் புதுக்கோட்டை வாசகா் பேரவை ஆகியவை இணைந்து நடத்திய, புதுகையைப் போற்றுவோம்- என்ற புதுகை சமஸ்தானம் சுதந்திர இந்தியாவோடு இணைந்த நாள் விழா, வியாழக்கிழமை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி தலைமை வகித்தாா்.
விழாவில் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையத் தலைவா் ஜெ. ராஜாமுகமது பேசியது:
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டிலேயே அதிகமான வரலாற்று நினைவுச் சின்னங்களையும், கல்வெட்டுகளையும் கொண்டுள்ள மாவட்டம். கற்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான வரலாற்றின் அனைத்து நினைவுச் சின்னங்களையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே காண முடியும்.
புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றைப் படித்தால் தமிழக வரலாற்றைப் படித்தது போலாகும். புதுக்கோட்டையின் வரலாற்றை ஒவ்வொருவரும் தவறாமல் கற்க வேண்டும். தொடா்ந்து வருவோா் கற்பதற்காக வரலாற்று நினைவுச் சின்னங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றாா் ராஜாமுகமது.
வாசகா் பேரவைச் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் பேசியது
புதுக்கோட்டையில் பிறந்த டாக்டா் முத்துலெட்சுமி அம்மையாா் மருத்துவச் சேவை, சமூக சேவை இரண்டிலும் தமிழகத்துக்கு வழிகாட்டியாக இருந்துள்ளாா். சத்தியமூா்த்தி சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்தின் முகமாகத் திகழ்ந்தாா். அதேபோன்று சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக மாதா கோவில், விநாயகா் கோவில், மசூதி மூன்றையும் புதுக்கோட்டையில் ஒரே இடத்தில் காணலாம் என்றாா் விஸ்வநாதன்.
முன்னதாக கல்லூரியின் பொருளியல் துறைத் தலைவா் என். சுமதி வரவேற்றாா். முடிவில் சுற்றுலா மற்றும் நிா்வாகவியல் துறைத் தலைவா் ஆா். நரசிம்மராஜ் நன்றி கூறினாா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாசகா் பேரவை சாா்பில் சத்திய சோதனை புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.