அறந்தாங்கி அருகே உள்ள துவரடிமனையை சேர்ந்தவர் அண்ணாதுரை. விவசாயி. இவரது மகள் பிரீத்தி (வயது 21). இவர், உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவதால் பிரீத்தி அங்கு தவித்து வந்தார். அவரை மீட்டுத்தரக்கோரி மாணவியின் பெற்றோர் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் நேற்று மாணவி பிரீத்தி உக்ரைன் நாட்டில் இருந்து அறந்தாங்கி வந்தடைந்தார். அவரை பெற்றோர் உணர்ச்சி பொங்க வரவேற்றனர். உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய பிரீத்தி கூறியதாவது:-
உக்ரைன் நாட்டில் போர் நடந்த போது எங்களை கவனமாக இருக்க சொன்னார்கள். அங்கிருந்து பஸ் மூலமாக ருமேனியா வந்தோம். நாங்கள் பஸ்சில் ஏறியபோது ஏராளமானவர்கள் கூட்டம், கூட்டமாக பஸ்சை சூழ்ந்ததால் மிளகாய் பொடி, மிளகு பொடி தூவி கூட்டத்தை கலைத்து எங்களை பஸ்சில் ஏற்றிச்சென்று பாதுகாப்பாக தங்க வைத்து இருந்தனர். அங்கிருந்து மத்திய அரசு குழுவினர் இந்திய மாணவர்களை மும்பை அழைத்து வந்தனர். அங்கிருந்து சென்னை வந்தடைந்தோம். பின்னர், எங்களை சொந்த ஊருக்கு காரில் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். என்னை போன்ற மாணவ-மாணவிகள் இன்னும் அங்கு உள்ளனர். அவர்களையும் மத்திய-மாநில அரசுகள் மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.