உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலி: உக்ரைனில் இருந்து புடாபெஸ்ட் வழியாக மும்பை வருகிறார் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் ரியாஸ் கான்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே  கோபாலப்பட்டிணம் அவுலியா நகரைச் சேர்ந்த ஜகுபர் சாதிக் மகன் ரியாஸ் கான் (வயது 20). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள உஷ்கோரத் நகரில் தங்கி உஷ்கோரத் நேஷனல் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவருடன் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவதால் ரியாஸ் மற்றும் நண்பர்கள் அங்கு தவித்து வந்தனர். அவரை மீட்டுத்தரக்கோரி மாணவரின் பெற்றோர் , உறவினர்கள் ‌, சமூக ஆர்வலர்கள்  மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.




இந்நிலையில் ரியாஸ் கான் உக்ரைன் நாட்டின் அருகே உள்ள ஹங்கேரி நாட்டிற்கு கடந்த ஐந்து நாட்களுக்கு முன் அழைத்து வரப்பட்டு புடாபெஸ்ட் என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டர்.

 இதனிடையில் புடாபெஸ்ட்லிருந்து இந்திய அரசு ஏற்பாடு செய்த விமானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு புறப்படும் ‌என  அறிவிக்கப்பட்டு இருந்தது. பின் காலதாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மும்பை விமான  நிலையத்திற்கு ரியாஸ் கான் வந்து இறங்குவார். 

விரைவில் சென்னை வழியாக நாளை அல்லது நாளை மறுநாள் கோபாலப்பட்டிணம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments