SDPI கட்சி அறந்தாங்கி தெற்கு தொகுதியின் மாதாந்திரக் கூட்டம்




SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தெற்கு தொகுதியின் மாதாந்திரக் கூட்டம் கோட்டைப்பட்டிணம் கட்சி அலுவலகத்தில்  4/3/2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை அறந்தாங்கி தெற்கு தொகுதி செயலாளர் முகமது மைதீன் வரவேற்புரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார். அறந்தாங்கி தெற்கு தொகுதி தலைவர் முகமது யாசின் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி துணை தலைவர் பசீர் மாமா முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் U.செய்யது அகமது மற்றும்  மாவட்ட செயலாளர் முகம்மது சாலிஹ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

கூட்டத்தில் தெற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது , மணமேல்குடி நகர நிர்வாகிகள், கோட்டைப்பட்டினம் நகர நிர்வாகிகள் மற்றும் மீமிசல் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு மின்சார இணைப்பு மற்றும் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக  தெற்கு தொகுதி பொருளாளர்  இஸ்மாயில் நன்றி உரை நிகழ்த்தினார்.

தகவல்:
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments