ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது இத்ரீஸ் என்பவர் கிடைத்துவிட்டார்!




ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது இத்ரீஸ் என்பவர் கிடைத்துவிட்டார்.


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 
முஹம்மது இத்ரீஸ் த/பெ ஜெயினுல் ஆப்தீன் என்பவரை கடந்த 12.2.2022 அன்று முதல் காணவில்லை எனவும் இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு  03.03.2022 வியாழக்கிழமை அன்று நமது GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதனடிப்படையில் பட்டுக்கோட்டை அருகே அம்மாப்பட்டினத்தை சேர்ந்த நபரால் அடையாளம் காணப்பட்டு உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.

இந்த செய்தியை பதிவு செய்த GPM மீடியாவிற்கும் இந்த செய்தியை பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தார்கள் சார்பாகவும், அவரது அண்ணன் ஜெ.அஹமது  கபீர், தம்பி ஜெ.முஹம்மது பாருக் சார்பாகவும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்
 
GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.

தகவல்: பாரூக், ஜெகதாப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments