15/03/2022 செவ்வாய் கிழமை தொண்டியில் நமது நாட்டுப்படகு மீனவர்களின் எழுச்சிமிக்க போராட்டம்
"கடலில் இறங்கி கண்டண ஆர்ப்பாட்டம்" நடைபெற உள்ளது.
எனவே இந்த போராட்டம் சிறப்பான வெற்றிபெற நாட்டுப்படகு மீனவர்களாகிய நாம் நமது படகுகளை இன்று மார்ச் 14 - திங்கள் கிழமை மாலையிலிருந்தே நிறுத்தி வைக்க வேண்டுகிறோம். மேலும் நமது படகு ஒவ்வொன்றிலும் கறுப்பு கொடி கட்டி நமது எதிர்ப்பை தெரிவிப்பதுடன் அதனை செல்போனில் படம் பிடித்து அந்தந்த கிராமத்தின் பெயர் விபரங்களை பதிவு செய்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இணைய தளங்களில் வெளியிட வேண்டுகிறோம். அப்படி வெளியிடும் பொழுது கீழ்க்கண்ட வாசகங்களையும் எழுதி வெளியிடவும் வேண்டுகிறோம்.
விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடிப்பால் தொடர் பாதிப்புக்கு உள்ளாகிவரும் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மார்ச் 15 -ல் தொண்டியில் கடல் தொழிலாளர் சங்கம் (Citu) மற்றும் இராமநாதபுரம் மாவட்ட அனைத்து நாட்டுப்படகு மீனவ கிராம மக்கள் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்.
இந்த நிகழ்ச்சியினை அந்தந்த கிராம நிர்வாகமே முன்னின்று ஆண்களும் பெண்களுமாக கூடி நின்று செய்திடவும் வேண்டுகிறோம்.
மார்ச் 15 - ம் தேதி காலை சரியாக 10 மணியளவில் தொண்டி மீன்பிடி துறைமுகத்தில் மாதா கோவில் எதிர்புறம் கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
இவண்
M.கருணாமூர்த்தி ஒருங்கினைப்பாளர்
இராமநாதபுரம் மாவட்ட அனைத்து நாட்டுப்படகு மீனவ கிராம ஒருங்கிணைப்பு குழு
செல்: 94434 05840
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.