புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறையில் பயன்படுத்திய பழைய வாகனங்கள் பொது ஏலம்






புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறையில் பயன்படுத்திய பழைய வாகனங்கள் பொது ஏலம்

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 22 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 25 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலையில் வருகின்ற 03 / 03 / 2022 - ஆம் தேதி காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது . 

ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 02.03.2022 - ம் தேதி 05.00 மணி வரை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம். 

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் அன்றே ( 02.03.2022 - ம் தேதி ) தலா ஒரு இரு சக்கர வாகனத்திற்கு ரூ.1000/- ரூபாய் மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு ரூபாய் ரூ.2000/- முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் எடுத்த உடன் முழு தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி ( GST இருசக்கர வாகனங்களுக்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18% ) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்று ரொக்கமாக கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல் என கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments