பெட்ரோல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று நூதன போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்துவது போல, இறந்தவர்களை அடக்கம் செய்ய கொண்டு வரப்படும் வாகனத்தில் வைத்து, மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டரை பாடை கட்டி, மாலை அணிவித்து, வாகனத்தில் மாலைகளால் அலங்கரித்தும் ஊர்வலமாக கணேஷ்நகர் போலீஸ் நிலையம் அருகே இருந்து போஸ்நகரில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு வந்தனர்.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். சுடுகாட்டில் வைத்து மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டரை இறக்கி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.