சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 28). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 3-3-2020 அன்று ஒரு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை அருகில் உள்ள டீக்கடையின் பின்புறத்திற்கு அழைத்து சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு தவறாக நடந்து கொள்ள முயன்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் வன்கொடுமையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து ராஜமாணிக்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
3 ஆண்டு சிறை தண்டனை
இந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் ராஜமாணிக்கத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.50 ஆயிரம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ராஜமாணிக்கத்தை திருச்சி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.