சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனைபுதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு



 
சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 28). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 3-3-2020 அன்று ஒரு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை அருகில் உள்ள டீக்கடையின் பின்புறத்திற்கு அழைத்து சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு தவறாக நடந்து கொள்ள முயன்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் வன்கொடுமையில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து ராஜமாணிக்கத்தை கைது செய்தனர்.‌ இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

3 ஆண்டு சிறை தண்டனை
இந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் ராஜமாணிக்கத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.50 ஆயிரம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ராஜமாணிக்கத்தை திருச்சி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments