மணமேல்குடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு





புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அம்பிகாபதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியில் செயல்பட்டு வந்த சில்லறை விற்பனை அரசு மதுபான கடையை டாஸ்மாக் நிர்வாகம் மூடியது. தற்போது அதே பகுதியில் வேறொரு இடத்தில் சில்லறை விற்பனை மதுபான கடை திறக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. புதிய மதுபான கடையை திறக்க கூடாது என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மணமேல்குடி பகுதியில் புதிய மதுபான கடை திறக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், மனுதாரரின் மனுவை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் 6 வாரத்திற்குள் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும். அதுவரை புதிய மதுபான கடையை திறக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments