அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பஸ் மோதல்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா சி.கே.மங்கலம் அருகே உள்ள மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர், கார்த்திக் (வயது22). இவர் மோட்டார் சைக்கிளில், கல்லூரி மாணவர் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் நுங்கு மூடையை வைத்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார். கருமொழி பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள் சேதமடைந்து திடீரென தீப்பற்றி எரிந்தது.
சிகிச்சை
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்ததுடன் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கார்த்திக்கின் தாயார் ஸ்ரீபிரியா, திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார், அரசு பஸ் டிரைவரான மண்டபத்தை சேர்ந்த பூவேஸ் பாண்டியன் (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.