கறம்பக்குடி அருகே கீராத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). இவர் அப்பகுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நீர்த்தேக்க தொட்டி மின் மோட்டாருக்கான மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கோவிந்தராஜ் அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி பீஸ் போட முயன்றார். கவன குறைவால் மின்சாரத்தை துண்டிக்காமலேயே டிரான்ஸ்பார்மரில் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் டிரான்ஸ்பார்மரில் தொங்கினார். தீ பற்றியதில் அவரது வலது கை துண்டாகி கீழே விழுந்தது. உறவினர்கள், பொதுமக்கள் பார்த்து கொண்டிருந்தபோதே இச்சம்பவம் நடந்ததால் அனைவரும் அலறி துடித்தனர். பின்னர் அப்பகுதி இளைஞர்கள் மின்சாரத்தை துண்டித்து அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தராஜ் கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மின்இணைப்பு கொடுக்க முயன்றவர் உறவினர்கள் முன்னிலையில் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.