டிஜிட்டல் இந்தியாவில் மிகவும் பிரபலமான எளிதான பணப்பரிமாற்ற முறையாக இருப்பது UPI சேவைதான். கூகுள் பே, போன் பே போன்ற பல செயலிகள் மூலம் சுலபமாக பயனர்கள் இந்த முறை பணப்பரிமாற்றத்தை நித்தமும் உபயோகித்து வருகிறார்கள்.
இந்தியாவில் 26 கோடிக்கும் மேலான தனி நபர்களும், 5 கோடிக்கும் மேலான வணிகர்களும் இந்த UPI சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். 2022 மே மாதத்தில் மட்டுமே 594.63 கோடி பரிவர்த்தனை மூலம் ரூ.10.40 லட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த UPI சேவைகள் இதுவரையில் டெபிட் கார்டுகள் மூலம் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளை இணைத்து பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த சேவையில் தற்போது கிரெடிட் கார்டுகளையும் இணைத்து யுபிஐ சேவைகளை பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் 2 நாள் நாணய கொள்கை கூட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வட்டி விகித அறிவிப்பு, யுபிஐ சேவைகள் உள்ளிட்டவை குறித்து பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் RBI ஆளுநர் சக்தி காந்ததாஸ்.
அதில் ஒன்றுதான் UPIல் கிரெடிட் கார்டு சேவையை பயன்படுத்துவது.
அதன்படி UPIல் முதற்கட்டமாக Rupay கிரெடிட் கார்டுகளை இணைத்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டப்பின் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியாக UPI சேவையில் டெபிட் கார்டை போன்று கிரெடிட் கார்டையும் இணைப்பதால் கார்டை ஸ்வைப் செய்யாமல் QR கோட் அல்லது UPI ID மூலமே வாடிக்கையாளர்கள் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம். இந்த சேவையை பெற UPI செயலில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டு OTP-ஐ பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.