புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை 15-ந் தேதி அதிகாரிகள் ஆய்வு



    
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை 15-ந் தேதி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

சாலை பாதுகாப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டும், விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிடவும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாகனங்களையும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்கள்

அதன்படி வருகிற 15-ந் தேதி காலை 9 மணிக்கு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் கலெக்டர் கவிதாராமு தலைமையில் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் முன்னிலையில் ஆய்வு செய்யப்படவுள்ளன. எனவே ஆய்விற்கு வரும் வாகனங்களோடு, டிரைவர்கள் அவ்வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனத்தின் அசல் ஆவணங்கள், நடப்பில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, ஓட்டுனர் பெயர்வில்லை பொருத்திய உரிய சீருடையுடன் ஆய்விற்கு அன்று கொண்டு வர வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி உரிமையாளர்கள் வாகனங்களை அனுப்பி வைக்க புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments