மின்வாரியத்தின் அலட்சியத்தால் கோபாலப்பட்டிணத்தில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்!!




    கோபாலப்பட்டிணம் கடற்கரை பகுதியில் ஆபத்தான நிலையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் மாற்றாமல் அலட்சியப்படுத்துவதாக மின்வாரிய அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கடற்கரையில் சாலையின் ஓரத்தில் உள்ள மின்கம்பங்கள் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.  தற்போது இந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் வெளியே தெரியும் நிலையில் காட்சியளிக்கிறது.

இது எந்த நேரத்திலும் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.





இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பம் குறித்து, மின்வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு போய் விட்டோம். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் பலத்த காற்று அடித்தால் எப்போது வேண்டுமாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, உயிர் பலிக்கு காத்திருக்கும் மின்கம்பத்தை உடனடியாக அப்பறப்படுத்தி, புதிய மின்கம்பம் நட ஏற்பாடு செய்ய வேண்டும்,’ என்றனர்.

மேலும் இது போன்று கோபாலப்பட்டிணத்தில் பல மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

GPM மீடியாவில் கடந்த 15/02/2022 அன்று கோபாலப்பட்டிணம் கடற்கரையில் எலும்பு கூடாக காட்சி அளிக்கும் மின்கம்பங்களை மாற்ற மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை.!! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும் இத்தகவலை மின்வாரிய அதிகாரிகளுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தெரியப்படுத்தினோம் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments