இலங்கை கடற்படையினரால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேர் நடுக்கடலில் கைது!




நடுக்கடலில் இரவில் தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை 

வங்கக்கடலில் இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மேலும் ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.


ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து நேற்று காலையில் 93 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இதில் மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரியைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான விசைப்படையில் சென்ற மீனவர்கள் கரையில் இருந்து 30 கடல் மேல் தொலைவில் நேற்று இரவு 8.30 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

இப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதில் கார்த்திக், மற்றும் அவருடன் சென்ற அதே ஊரை சேர்ந்த தேவராஜ் , சுரேஷ் திருமேனி, வேல்முருகன், சுந்தரம் ஆகிய 6 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் அனைவரையும் மயிலட்டி துறைமுகம் கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர், இன்று அவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள் என தெரிகிறது. கடந்த வாரத்தில் புதுக்கோட்டை மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில் இந்த வாரத்தில் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டு இருப்பது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடி தடைக் காலம் முடிந்து சில நாட்களே ஆகி உள்ள நிலையில், தொடர்ந்து இலங்கை கடற்படையினர் இப்படி இந்திய மீனவர்களை கைது செய்து வருவது மீனவர்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments