மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்த வேண்டும்-ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கோரிக்கை




மணல்திட்டை அகற்றி மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்த வேண்டும் என ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே உள்ள கடல் பகுதியில் மணல் திட்டு ஏற்பட்டு அந்த இடமே தற்போது மேடாக உள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் படகினை கரையில் கட்டி விட்டு மீண்டும் கடலுக்குள் திரும்ப போகும் போது கடல் நீர் சில நேரங்களில் உள்வாங்கிறது.

இதனால் கரையிலிருந்து கடலுக்குள் மீன்பிடி செல்ல முடியாமல் மீனவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், இந்த மணல் திட்டு காரணமாக பிடித்துவரப்பட்ட மீன்களை மீன்பிடிதளத்தில் நேரடியாக கொண்டு செல்ல முடியாமல் நாட்டுப்படகு மூலம் விசைப்படகு இருக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்து மீன்களை ஏற்றி கரைக்கு கொண்டு வரும் அவல நிலை ஏற்படுகிறது.

ஆழப்படுத்த கோரிக்கை

அடிக்கடி கடல் நீர் சற்று உள்வாங்குவதால் மணல்திட்டு மேலே தெரிகிறது. இதனால் கடலுக்குள் எப்படி செல்வது என்று தெரியாமல் மீனவர்கள் திகைத்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மீனவர்களின் நலன் கருதி அந்த மணல்திட்டை அகற்றி மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments