பலத்த காற்று
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்தநிலையில் வங்க கடலில் பலத்த காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும், இவர்களின் விசைப்படகுகள் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 3ந் தேதி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறையால் 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் இந்த மாதத்தில் (ஆகஸ்டு) குறைந்த நாட்கள் தான் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளோம். கடந்த 3ந் தேதி பலத்த காற்று வீசியதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க மீன்வளத்துறையால் தடை விதிக்கப்பட்டது. இதனால் 10 நாட்கள் கழித்து கடந்த 13ந் தேதி தான் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றோம்.
இந்நிலையில் மறுபடியும் இப்பகுதியில் பலத்த காற்று வீசப்படும் என்பதற்காக மீன்வளத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதித்துள்ளனர். இந்த தடையினால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே தமிழக அரசு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.