புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து பொதுமக்கள் அமரவும் பேருந்துகள் நிறுத்த போதுமான நிறுத்தங்களை பேருந்து நிலையத்தில் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக பெரிய நகராக விளங்கி வருகிறது. மேலும் அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்செந்தூர், குமுளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதனால், அறந்தாங்கி பேருந்து நிலையத்தை தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான அறை மாதக்கணக்கில் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்தால் மட்டுமே பெற முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது.
இது குறித்து கடந்த காலங்களில் GPM மீடியாவில் வெளியிட்டுள்ள செய்திகள் பின்வருமாறு
அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் போதுமான பேருந்துகளை நிறுத்துவதற்கு இடம் இல்லை என்ற குற்றச்சாட்டும் பல ஆண்டுகளாக எழுந்து வருகின்றது. தினசரி நூற்றுக்கணக்கான புறநகர் பேருந்துகளும் 50-க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகளும் அறந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
ஆனால் ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்தில் 20 பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடியும் என்ற சூழல் நிலை வருகிறது. அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அமருவதற்கும் போதுமான இடம் இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது போல பொதுமக்கள் பல வகைகளும் கடும் அவதியை அடைந்து வருகின்றனர். மேலும் பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதி சுகாதாரமற்ற முறையில் இருந்து வருகிறது, அதையும் சரி செய்து பொதுமக்கள் முகம் சுளிக்காத வகையில் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து போதுமான பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும், பொதுமக்கள் அமர உரிய இருக்கைகளை அமைக்க வேண்டும், கூடுதலாக சுகாதாரமான சூழல் பேருந்து நிலையத்திற்குள் நிலவவும் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அறந்தாங்கி பொதுமக்கள் கவலையுடன் முன்வைக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.