அறந்தாங்கியில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு





அறந்தாங்கியில் அரசு டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு டாக்டர்

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் தெரு சின்ன வாட்டர் டேங்க் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவரது மனைவி மாதினி. இவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் திரும்பி வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

12 பவுன் நகை திருட்டு

இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் வீட்டில் 12 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments