சாலை வசதி கேட்டு கறம்பக்குடி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை



    
 கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு புளியஞ்சோலை பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நகர தலைவர் ரகமத்துல்லா தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அறிந்த பேரூராட்சி தலைவர் முருகேசன் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாலை வசதி செய்து தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments