நாகை- திருச்செந்தூர் விரைவு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக திருச்செந்தூருக்கு தமிழ்நாடு அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வந்தது நாகப்பட்டினத்தில் மாலை 6 மணிக்கு பேருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, மீமிசல், தொண்டி, ராமநாதபுரம் சாயல்குடி,தூத்துக்குடி வழியாக மறுநாள் அதிகாலை திருச்செந்தூரை இந்த பஸ் சென்றடையும்.
நாகை, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பக்தர்கள் ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் செல்வதற்கு இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குறிப்பாக வியாபாரிகள் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சென்று புளி, வெல்லம், பருப்பு போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வதற்கு இந்த பஸ் பயனுள்ளதாக இருந்தது. இந்த பஸ் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறாா்கள்.
எனவே கும்பகோணம் மண்டல போக்குவரத்துக்கழக மேலாளர் உடனடியாக நாகப்பட்டினம் முதல் திருச்செந்தூர் வரையிலான விரைவு பஸ்சை திருத்துறைப்பூண்டி வழியாக மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.