புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகிலுள்ள ஏம்பக்கோட்டை மஹல்லாவில் உள்ள ரஹுமா பரக்கத் நிஸ்வான் மதரஸாவில் 10/09/22 ஞாயிற்றுக்கிழமை அன்று மதரஸா மற்றும் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆலிமா, ஆசிரியைகளுக்கான ஆசிரியர் பயிற்சி விளக்க முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை மதரஸாவின் முதல்வர் மௌலானா முகமது மைதீன் ஹஜரத் அவர்கள் தொகுத்து வழங்கினார். இதில் மக்தப் வரலாறு
கற்பிக்கும் முறை தஜ்வீதின் முக்கியத்துவம், உளவியல் பாடத்திட்ட விளக்கம், கேள்வி-பதில் போன்ற பல்வேறு விஷயங்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு உலமாக்கள் கலந்துகொண்டு பலவிதமான விளக்கங்களை கொடுத்தனர்.
கட்டுமாவடி,கோட்டைப்பட்டிணம்,கோபாலப்பட்டிணம்,R.புதுப்பட்டிணம், அரசநகரிபட்டிணம், செந்தலைப்பட்டிணம், எஸ்.பி.பட்டிணம், ஏம்பக்கோட்டை, அறந்தாங்கி, புதுக்கோட்டை போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து 85-க்கும் அதிகமான ஆலிமாக்களும், பட்டம் பெறக்கூடிய இறுதி ஆண்டு மாணவிகளும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இறுதியாக மதரஸாவின் நிறுவனர் ஹாஜி N.S .அயூப்கான் அவர்களின் பெற்றோர்களான மர்ஹூம் சுலைமான் அவர்களுக்கும், மர்ஹூமா ரஹுமா பீவி அவர்களுக்கும் யாஸீன் ஓதி துஆ செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இறுதியில் நடந்த விளக்க முகாமில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதிலை சொன்ன அதிகமான நபர்களில் மூன்று நபர்களுக்கு மட்டும் குழுக்கள் முறையில் குர்ஆன் கிதாபுகள் பரிசாக வழங்கப்பட்டது. இறுதியாக மௌலானா சவுக்கத் அலி ஹஜரத் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.