புதுக்கோட்டை மாவட்டத்தின் ரயில் கோரிக்கைளை நிறைவேற்ற கோரி தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர் சந்தித்து திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசு MP வலியுறுத்தல்






புதுக்கோட்டை மாவட்டத்தின் ரயில் கோரிக்கைளை நிறைவேற்ற கோரி 
தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர்   சந்தித்து  திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசு MP வலியுறுத்தினார்கள். 


இன்று (23.09.22) தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர் திரு.பி.கோ. மால்யா அவர்களை நேரில் சந்தித்து 

* புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன்  

* புதுக்கோட்டை – தஞ்சாவூர் வழி கந்தர்வக்கோட்டை புதிய ரெயில் பாதை அமைக்க  உரிய நடவடிக்கை வேண்டும் என்றும்,

* காரைக்குடி – திருவாரூர் வழி அறந்தாங்கி , பேராவூரணி, பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை ,திருத்துறைப்பூண்டி,  மார்க்கத்தில் ரெயில்கள் இயக்க போதுமான கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும் என்றும்,    

*திருவப்பூர் மற்றும் கருவப்பலான் கேட் மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தவேண்டும்  என்றும் அத்துடன் மேலும்  பல  கோரிக்கைகளையும்  வலியுறுத்தினார்கள்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments