அம்மாபட்டினம் ஆண்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியம் அம்மாப்பட்டினம் ஆண்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்ற பள்ளிமேலான்மைக் குழு கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திரு.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
மணமேல்குடி வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளர் திருமதி. சிவயோகம் (பொறுப்பு) முன்னிலை வகித்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.சுந்தராசு அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவி புவனேஸ்வரி, கல்வியாளர் முகமது ஜலில் மற்றும் உறுப்பினர்கள் குறிஞ்சி நைனா முகமது, ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
#இடைநிற்றலைத் தவிர்த்தல்.
# பள்ளிக் கட்டிடங்கள், கழிப்பறை மற்றும் பள்ளிசசுற்றுச்சுவர் பழுது பார்த்தல்.
# பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காதவண்ணம் மண் நிரப்புதல்.
#தமிழ் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமனம் செய்தல்.
#அருகில் உள்ள குளம் தூய்மை செய்தல்.
இக்கூட்டத்தின் முடிவில் ஆசிரியர்
J.L.A.ஆரோக்கியம் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.