கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கழிவறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நீண்ட நாள் கோரிக்கையான பெண்களுக்கான கழிவறை வசதி பணிகள் நிறைவுற்ற நிலையில் நேற்று 30/09/2022 வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாத் நிர்வாகிகள், SRM. சேக் பரீது மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் பிள்ளைகளுக்கு இருந்த கழிவறை பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் பெண் பிள்ளைகளுக்கு தனியாக கழிவறை கட்டித்தர வேண்டி அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றி தரவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் கோபாலப்பட்டிணம் இளைஞர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி கழிவறை கட்ட முடிவு செய்து களத்தில் இறங்கினர். அதனடிப்படையில் சகோதரர் SRM. இம்ரான் கான் அவர்களிடம் நிதி கேட்ட போது நானே முழுமையாக கட்டி தருகிறேன் என பொறுப்பேற்று கொண்டார். அதன்படி RSM பில்டர்ஸ் சார்பாக எந்த ஒரு கமிஷனும் இல்லாமல் வேலை செய்து தருவதாக முன்வந்த நிலையில் உமர் (எ) அசார் ரிலாக்ஸ் கன்ஸ்ட்ரக்ஸன் மேற்பார்வையில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டது.
கழிவறை கட்டி முடிக்க பொருளாதார உதவி செய்த சகோதரர் SRM.இம்ரான் கான் அவர்களுக்கும், இதற்காக உழைத்த RSM.பில்டர்ஸ் செய்யது இபுராஹிம், அசார் ரிலாக்ஸ் கன்ஸ்ட்ரக்ஸன் மற்றும் உறுதுணையாக இருந்த சகோதரர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களை பள்ளி ஆசிரியபெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல்: அப்துல் ரசாக், கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.