தமிழகத்தில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வு மூலம் நேற்று நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வை எழுத விண்ணப்பித்த 5 ஆயிரத்து 466 ஆண்கள், 2 ஆயிரத்து 168 பெண்களுக்கு என மொத்தம் 7 ஆயிரத்து 634 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தன. அதன்படி தேர்வை எழுதுவதற்காக 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
தேர்வை எழுதுவதற்காக தேர்வர்கள் நேற்று காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இத்தேர்வுக்காக பெண்களுக்கு தனி மையம் அமைக்கப்பட்டிருந்தது.
6,428 பேர் எழுதினர்
தேர்வு மையத்திற்குள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்களிடம் இதனை நுழைவுவாயிலிலேயே போலீசார் வாங்கி வைத்துக்கொண்டு டோக்கன் வினியோகம் செய்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்ததும் அவை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வினை ஆண்கள் 4 ஆயிரத்து 586 பேரும், பெண்கள் 1,842 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 428 பேர் எழுதினர். 1,206 பேர் தேர்வு எழுதவரவில்லை.
புதுக்கோட்டையில் மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றதை சென்னை காவலர் பயிற்சி பள்ளி டி.ஐ.ஜி. ஆனிவிஜயா பார்வையிட்டார். இதேபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆய்வு மேற்கொண்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.