புதுக்கோட்டை மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வு; 6 ஆயிரத்து 428 பேர் எழுதினர்




தமிழகத்தில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வு மூலம் நேற்று நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வை எழுத விண்ணப்பித்த 5 ஆயிரத்து 466 ஆண்கள், 2 ஆயிரத்து 168 பெண்களுக்கு என மொத்தம் 7 ஆயிரத்து 634 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தன. அதன்படி தேர்வை எழுதுவதற்காக 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தேர்வை எழுதுவதற்காக தேர்வர்கள் நேற்று காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இத்தேர்வுக்காக பெண்களுக்கு தனி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

6,428 பேர் எழுதினர்

தேர்வு மையத்திற்குள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்களிடம் இதனை நுழைவுவாயிலிலேயே போலீசார் வாங்கி வைத்துக்கொண்டு டோக்கன் வினியோகம் செய்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்ததும் அவை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வினை ஆண்கள் 4 ஆயிரத்து 586 பேரும், பெண்கள் 1,842 பேரும் என மொத்தம் 6 ஆயிரத்து 428 பேர் எழுதினர். 1,206 பேர் தேர்வு எழுதவரவில்லை.

புதுக்கோட்டையில் மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றதை சென்னை காவலர் பயிற்சி பள்ளி டி.ஐ.ஜி. ஆனிவிஜயா பார்வையிட்டார். இதேபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆய்வு மேற்கொண்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments