புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன. இதேபோல் இடைநில்லாமல் இயக்கப்படும் குளிர்சாதன வசதி அரசு பஸ் சேவையும் உள்ளது. இதில் புதுக்கோட்டை வழியாக செல்லும் பஸ்களும் உண்டு. இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கூடுதலாக ஒரு குளிர்சாதன வசதி கொண்ட அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து காலை 6.10 மணி, காலை 8.45 மணி, காலை 11.42 மணி, மதியம் 2.32 மணி, மாலை 5.10 மணி ஆகிய நேரங்களில் இந்த கூடுதல் பஸ் சேவை இயக்கப்படுகிறது. இடைநில்லாமல் இயக்கப்படும் இந்த பஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் திருச்சி சென்றடைவதால் பயணிகள் கூட்டம் இந்த பஸ்சில் அலைமோத தொடங்கி உள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.