பாம்பன்ரோடு பாலத்தின் நுழைவுப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் லேசான காயத்துடன் 30 பயணிகள் உயிர் தப்பினர்.
கடற்கரை பூங்கா
மதுரையில் இருந்து நேற்று காலை 7.45 மணிக்கு ராமேசுவரத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த டிரைவர் ராஜ்ஜியம்(வயது 42) ஓட்டினார். இந்த பஸ், நேற்று காலை சுமார் 10.30 மணிக்கு பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதியான மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே வந்து கொண்டு இருந்தது.
இந்த பஸ் முன்பு ராமேசுவரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதையடுத்து மதுரை அரசு பஸ் டிரைவர் அந்த பஸ்சின் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், மண்டபம் கடற்கரை பூங்கா சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து சுற்றுச்சுவரில் மோதி நின்றது.
பயணிகள் உயிர் தப்பினர்
இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து பஸ்சில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நடைபெறும்போது பாம்பன் ரோடு பாலம் மற்றும் மண்டபம் கடற்கரை பூங்கா வரையிலும் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
இதனால் வாகனங்கள் பிரேக் பிடித்தாலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடைபெறும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
எனவே மண்டபம் கடற்கரை பூங்கா முதல் பாம்பன் ரோடு பாலம் வரையிலும் சாலையை முழுமையாக ஆய்வு செய்து தரமான சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.