கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெண் படல அலர்ஜி நோய் என்ற கண் நோய் (மெட்ராஸ்-ஐ) அதிகமாக பரவி வருகிறது. மணமேல்குடி பகுதிகளிலும் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் சிறுகுழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் சிவத்தல், கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. வீட்டில் ஒருவருக்கு மெட்ராஸ்-ஐ வந்தால் அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் பரவி விடுகிறது. இதனால் சிகிச்சைக்காக கண் மருத்துவரை நாடி வெளியூர் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இந்நோயின் தாக்கம் 3 நாள் முதல் ஒரு வாரம் வரை இருக்கிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இந்த பகுதியில் கண் மருத்துவர் இல்லாததால் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து கண் மருத்துவரை கொண்டு முகாம் அமைத்து இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் இந்நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.