பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து டிசம்பர் 28, 29, 30 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்)
மற்றும் டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
டிசம்பர் 29 முதல் 31 வரை திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி, மற்றும் அனைத்து மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல இதே காலத்தில் புறப்பட வேண்டிய வருகை தரவேண்டிய வாராந்திர விரைவு ரயில்களும் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 9360548465 அலைபேசி எண்ணுடனும், மண்டபம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 9360544307 என்ற அலைபேசி எண்ணுடனும் செயல்படுகிறது.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் செகந்திராபாத் - இராமேஸ்வரம் - செகந்திராபாத் ரயில் மானாமதுரை வரை மட்டுமே செல்லும்.. மானாமதுரையில் இருந்து புறப்படும்
திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செகந்திராபாத்- ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது
செகந்திராபாத் - இராமேஸ்வரம்
செகந்திராபாத் -ராமேஸ்வரம் (வண்டி எண் 07695) வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை திருவாரூர் (15.15), திருத்துறைப்பூண்டி(15.58), அதிராம்பட்டினம் (16.34), பட்டுக்கோட்டை (16.50), .அறந்தாங்கி (17.50), காரைக்குடி (19.10) சிவகங்கை மானாமதுரை இராமநாதபுரம் வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடையும்.
இராமேஸ்வரம் - செகந்திராபாத்
இதைப்போல மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - செகந்திராபாத் (வண்டி எண் 07696) வாரந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 8.50 மணிக்கு ராமேசுவரத்தில் புறப்பட்டு இராமநாதபுரம் மானாமதுரை சிவகங்கை காரைக்குடி (12.05), அறந்தாங்கி (12.29), பட்டுக்கோட்டை (13.13), அதிராம்பட்டினம்(13.29), திருத்துறைப்பூண்டி (14.03), திருவாரூர் (15.15), மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை இரவு 9.50 மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது.
அட்டவணையில் மாற்றம்
இன்று (28/12/2022) செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இராமேஸ்வரம் விரைவு ரயில் மானாமதுரை ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும்.
மானாமதுரை - இராமேஸ்வரம் இடையே ரத்து செய்ப்பட்டுள்ளது.
டிசம்பர் 30, 2022 வெள்ளிக்கிழமை இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் செகந்திராபாத் விரைவு ரயில் இராமேஸ்வரம் - மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து இயங்கும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.