அரிமளம் அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம்




அரிமளம் அருகே கடியாப்பட்டி கிராமத்தார்கள் சார்பில், பொங்கலை முன்னிட்டு 20-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நேற்று நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 36 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 11 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாடு போய் வர 8 மைல் பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை விராமதி தையல் நாயகி மாட்டு வண்டியும், 2-ம் பரிசை பூக்கொல்லை ரித்தீஸ்வரன் மாட்டு வண்டியும், 3-ம் பரிசை பொன்ன காடு நட்சத்திரா மாட்டு வண்டியும், 4-ம் பரிசை பொன்பேத்தி மருதுபாண்டியர் மாட்டு வண்டியும் பெற்றன.

சிறிய மாட்டு வண்டி

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 24 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட ன. பந்தய தூரமானது போய்வர 6 மைல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் மாட்டு வண்டிகள் அதிகம் பங்கு பெற்றதால் பந்தயமானது 2 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை நெய்வாசல் மணி, வெளிமுத்தி வாகினி மாட்டு வண்டியும், 2-ம் பரிசை கரியப்பட்டி துரைராஜ், புலிமலைப்பட்டி வர்ஷிகா மாட்டு வண்டியும், 3-ம் பரிசை கல்லல் உடையப்பா, பீற்களைக்காடு பெரியசாமி மாட்டு வண்டியும், 4-ம் பரிசை வடகுடிப்பட்டி காளியம்மாள், கருப்பூர் வீரய்யா ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டியும் பெற்றன.

பரிசு

தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற திருமயம்- ராயவரம் சாலை இருபுறமும் திரளான பொதுமக்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments