தொண்டி சுங்கத்துறை கட்டடம் சேதம்; விநியோகஸ்தர்கள் புகார்




தொண்டி கடற்கரை ஓரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் சுங்கத்துறை அலுவலகம் கட்டப்பட்டது.

தொண்டியில் இருந்து இலங்கைக்கு தங்கம், கஞ்சா போன்ற பொருட்கள் கடத்துவதை தடுக்கும் வகையில் போலீசார் தங்கி இருந்து செயல்பட்டு வந்தனர்.

ஆரம்பத்தில் இலங்கையில் நடந்த உள் நாட்டு போரின் பொது தொண்டி அருகே கடற்கரைக்குள் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதன் பிறகு இதுவரை பெரிய அளவில் எந்த கடத்தலையும் தடுக்கவில்லை. பொருட்களும் கைபற்றப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரோந்து செல்ல அதி நவீன ரோந்து படகு வழங்கப்பட்டது. அதுவும் பழுதானதால் கடற்கரையில் நிறுத்தப்பட்டது.

தினமலர் செய்தி எதிரொலியாக அப்படகு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் சுங்கத்துறைக்கு சொந்தமான கட்டடம் சேதமடைந்தது.

தற்போது கடற்கரையில் இருந்து ஒரு கி.மீ.,ல் வாடகை கட்டடத்தில் அலுவலகம் செயல்படுகிறது. ரோந்து செல்லும் வகையில் கடற்கரை ஓரத்தில் உள்ள கட்டடத்தை விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments