சுவாமிமலையை அடுத்த நாகக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54). கடந்த 25 ஆண்டுகளாக சவூதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ரியாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜனவரி 11-ந்தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
தனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று பாமா, பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
இதையடுத்து அவரது அறிவுறுத்தலின் பேரில் மனிதநேய மக்கள் கட்சியின் அயலக பிரிவான இந்தியன் வெல்பேர் போரம் அமைப்பின் சவுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் மீமிசல் நூர் முஹம்மது மேற்பார்வையில் ரியாத் மண்டல சமூகநலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா, சமூக நலத்துறை இணைச் செயலாளர் அறந்தை சித்திக் மண்டல இணைச் செயலாளர் திருக்கோவிலூர் ஷாகீர் பேக் ஆகியோர் மாரிமுத்து வேலை செய்த நிறுவனம் மற்றும் சவுதியில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய சட்டரீதியான பணிகளை முடித்து மாரிமுத்து உடலை சவூதி அரேபியா ரியாத்திலிருந்து மும்பை வழியாக சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தனர்.
சென்னை வந்த மாரிமுத்துவின் உடலை அவரது மகன் கேசவன் மற்றும் அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டு, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் மூலமாக மாரிமுத்து உடலை நாகக்குடி கிராமத்துக்கு கொண்டு வந்து அவர் குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்தனர்.
இறுதிச் சடங்கு நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, பாபநாசம் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் முஹம்மது ரிபாயி, சுவாமிமலை பேரூர் தலைவர் புர்கான் அலி, முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.